Mjpahfkk; (mjpfhuk; 1)
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.(ஆதி 1:1)
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.(ஆதி 1:2)
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் வெளிச்சம் உண்டாயிற்று.(ஆதி 1:3)
வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார் வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெறுவேறாகப் பிரித்தார்.(ஆதி 1:4)
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார் இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.(ஆதி 1:5)
பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும் அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.(ஆதி 1:6)
தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார் அது அப்படியே ஆயிற்று.(ஆதி 1:7)
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.(ஆதி 1:8)
பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும் வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.(ஆதி 1:9)
தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும் சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார்.(ஆதி 1:10)
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும் விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று.(ஆதி 1:11)
பூமியானது புல்லையும் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார்.(ஆதி 1:12)
சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.(ஆதி 1:13)
பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.(ஆதி 1:14)
அவைகள் பமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார் அது அப்படியே ஆயிற்று.(ஆதி 1:15)
தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.(ஆதி 1:16)
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்(ஆதி 1:17)
பகலையும் இரவையும் ஆளவும் வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும் தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்.(ஆதி 1:18)
சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.(ஆதி 1:19)
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும் பமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும் ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.(ஆதி 1:20)
தேவன் மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்.(ஆதி 1:21)
தேவன் அவைகளை ஆசீர்வதித்து நீங்கள் பலுகிப் பெருகி சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.(ஆதி 1:22)
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.(ஆதி 1:23)
பின்பு தேவன்: பமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும் ஊரும் பிராணிகளையும் காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார அது அப்படியே ஆயிற்று.(ஆதி 1:24)
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும் பமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார்.(ஆதி 1:25)
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் மிருகஜீவன்களையும் மியனைத்தையும் பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.(ஆதி 1:26)
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.(ஆதி 1:27)
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்பி அதைக் கீழ்ப்படுத்தி சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.(ஆதி 1:28)
பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும் விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன். அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது.(ஆதி 1:29)
பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும் ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல ப10ண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார். அது அப்படியே ஆயிற்று.(ஆதி 1:30)
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார். அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.(ஆதி 1:31)




No comments:
Post a Comment